கரோனா பரவலைத் தடுக்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தவறிவிட்டார் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தனது பிரச்சாரத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் மாதம் 3 ஆம் நாள் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தற்போது பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
அமெரிக்காவில் நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் ஒபாமா பேசும்போது, “ 8 மாதங்களாக நமது நாட்டில் கரோனா பரவல் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டார். கரோனாவிலிருந்து நம்மைக் காக்க அவர் முதல் படியைக் கூட எடுத்து வைக்கவில்லை. எந்த வேலை செய்வதிலும் ட்ரம்ப் ஆர்வம் காட்டுவது இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும், ட்ரம்ப்புக்கு சீனாவில் வங்கிக் கணக்கு உள்ளது என்று ஒபாமா குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த ட்ரம்ப் தவறிவிட்டதாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் முடிவு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், நான் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்கள் மீதான தடையை நீக்குவேன் என்று ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
ஜோ பிடன் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் நாட்டைச் சரியாக வழிநடத்த மாட்டார் என்று ட்ரம்ப் விமர்சித்து வருகிறார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago