ஆப்கானிஸ்தானில் பல்க் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் 11 பேர் கொல்லப்பட்டனர்.
இதுகுறித்து ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் பல்க் மாகாணத்தில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய தாக்குதலில் தலிபான்கள் 11 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து அப்பகுதியில் சண்டை நடந்து வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் தலிபான்கள் நடத்திய தாக்குதலில் ஆப்கன் பாதுகாப்புப் படை வீரர்கள் பலியாகினர். இதற்குப் பதிலடியாக ஆப்கன் ராணுவம் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், தலிபான்களை அவ்வப்போது ஆப்கன் அரசு விடுவித்து வருகிறது. மேலும், ஆப்கானிஸ்தான் அரசு மற்றும் தலிபான்கள் இடையே கத்தாரில் நடைபெறும் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அதிபர் அஷ்ரப் கானி சம்மதம் தெரிவித்திருந்தார்.
முன்னதாக, ஆப்கானிஸ்தானில் தலிபான்களுடனான போரை முடிவுக்குக் கொண்டு வர அவர்களின் நிபந்தனைகளை ஏற்று 900 தலிபான்கள் விடுதலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
33 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இலக்கியம்
7 hours ago
தமிழகம்
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago
இந்தியா
4 hours ago