வியட் நாமில் பெய்த கனமழை காரணமாக ஆங்காங்கே நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து வியட்நாம் ஊடகங்கள் தரப்பில், “வியட்நாமில் கடந்த சில நாட்களாகவே கடுமையான மழை நீடிக்கிறது. இதன் காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதில் கட்டுமானப் பணியில் இருந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 15 பேர் மாயமாகினர். மேலும் மற்றுமொரு இடத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட 13 வீரர்கள் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வியட்நாம் பிரதமர் நியுவென் ஷுவான் ஃபுக் கூறும்போது, “மக்களைக் காப்பாற்ற அவர்கள் தங்கள் இன்னுயிரை இழந்துள்ளனர். அவர்கள் ஆன்மா சாத்தியடையட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், வியட்நாமில் அடுத்த வாரமும் கடுமையான மழை பெய்யும் என்று வானிலை எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன் காரணமாக மீட்புப் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
கரோனா தொற்று
வியட்நாமில் 1,124 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,030 பேர் குணமடைந்துள்ளனர். 35 பேர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
சுற்றுலா
11 mins ago
தமிழகம்
30 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
59 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
4 hours ago