ஈரானில் மூன்று வாரமாக கரோனாவினால் ஏற்படும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை தரப்பில், “ கடந்த 24 மணி நேரத்தில் 279 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஈரானில் மூன்று வாரங்களாக கரோனாவினால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. ஈரானில் இதுவரை 5 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் 29 ஆயிரம் பேர் கரோனாவுக்கு பலியாகி உள்ளனர். 4 லட்சத்துக்கு அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
ஈரானில் சமீபநாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருவதைத் தொடர்ந்து அங்கு பொதுமக்கள் அதிக எண்ணிகையில் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ஜிம், உணவகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. பழைய கட்டுப்பாடுகள் மீண்டும் தொடங்கியுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மத்தியக் கிழக்கு நாடுகளில் ஈரானும், சவுதியும் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. 80 மில்லியன் மக்கள்தொகை கொண்ட ஈரான், கரோனா வைரஸால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட நாடாக உள்ளது.
ஈரானின் புனித நகரமான கூமிலில் பிப்ரவரி மாதத்தில் முதல் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து வட பகுதியில் உள்ள சுற்றுலா நகரமான கிலான் கடுமையான பாதிப்புக்குள்ளானது. தற்போது ஈரானின் எல்லைப் பகுதியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் 90 லட்சம் பேர் வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
44 mins ago
வணிகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
தொழில்நுட்பம்
3 hours ago
சினிமா
4 hours ago
க்ரைம்
4 hours ago
விளையாட்டு
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
5 hours ago
க்ரைம்
5 hours ago