ஊரடங்கு அமல்படுத்துவதை முடிந்த அளவு தவிர்ப்போம்: ஏஞ்சலா மெர்கல்

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்துவதை எங்களால் முடிந்த அளவு தவிர்ப்போம் என்று ஏஞ்சலா மெர்கல் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் தீவிரமடைய தொடங்கியுள்ளது. இந்த நிலையில் ஜெர்மனியில் ஊரடங்கு விதிக்கப்படுமா என்ற கேள்விக்கு ஏஞ்சலா மெர்கல் பதிலளித்துள்ளார்.

இதுகுறித்து ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கல் கூறும்போது, “ நாங்கள் தேசிய அளவில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர்க்கப் பார்ப்போம். எங்களால் அது முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜெர்மனியில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா தடுப்பு மருந்து பரவலாக உலகம் முழுவதும் கிடைக்கும் வரை கரோனா வைரஸ் பாதிப்பால் 20 லட்சம் பேர் வரை பலியாகி இருப்பார்கள் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி உள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்