கனடாவில் அதிகரிக்கும் கரோனா

By செய்திப்பிரிவு

கனடாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,53,125 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து கனடா சுகாதாரத்துறை தரப்பில் கூறும்போது, “கனடாவில் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1,453 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கனடாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,53,125 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த சில நாட்களாகவே கனடாவில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மேலும் கனடாவில் இதுவரை கரோனா பாதிப்புக்கு 9,268 பேர் பலியாகி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குபெக் மற்றும் ஒண்டாரியா மாகாணங்களில் கரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கனடாவில் மீண்டும் கரோனா பரவல் அதிகரித்து வருவதால் மீண்டும் கட்டுப்பாடுகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் பரவிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. உலக நாடுகள் அனைத்தையும் கரோனா வைரஸ் அச்சுறுத்தி வரும் சூழ்நிலையில், இதற்கான தடுப்பு மருந்துகளைக் கண்டறியும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, இந்தியா, சீனா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தக் கரோனா தடுப்பு மருந்துகள் இறுதிக்கட்டச் சோதனையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, ரஷ்யாவின் ஸ்புட்னிக் -5 என்ற பெயரிலான தடுப்பு மருந்து விரைவில் சந்தைக்கு வரவுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

மேலும்