கடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர் வரை கரோனாவால் பாதிப்பு: உலக சுகாதார அமைப்பு

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருவதாக உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு தரப்பில், ''கடந்த சில வாரங்களாக கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் மட்டும் 20 லட்சம் பேர்வரை கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் இறப்பு எண்ணிக்கை குறைந்துள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பொருளாதாரத்தைக் காரணம் காட்டி உலக நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தின. இதனைத் தொடர்ந்து ஐரோப்பா போன்ற நாடுகளில் கரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு முன்னரே எச்சரிக்கை விடுத்து இருந்தது.

உலகையே அச்சுறுத்திவரும் கரோனா வைரஸால் இதுவரை உலக அளவில் 3 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகி உள்ளனர்.

கரோனா பாதிப்பில் முதல் நான்கு இடங்களில் அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. கரோனாவுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் பல்வேறு நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன. தடுப்பு மருந்துகளும் பல்வேறு சோதனைக் கட்டங்களில் இருக்கின்றன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

விளையாட்டு

3 mins ago

இந்தியா

21 mins ago

இந்தியா

10 mins ago

தமிழகம்

45 mins ago

ஓடிடி களம்

47 mins ago

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

மேலும்