ரஷ்யாவில் கரோனாவிலிருந்து 80% பேர் குணமடைந்துள்ளனர்

By செய்திப்பிரிவு

ரஷ்யாவில் கரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் சதவீகிதம் 80-ஐ கடந்துள்ளதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் தாப்பில், “ ரஷ்யாவில் கடந்த 24 மணி நேரத்தில் 4,697 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 120 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 80% பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் காமாலியா தொற்றுநோய் தடுப்பு நுண்அறிவியல் ஆய்வு நிறுவனம் ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிறுவனத்துடன் இணைந்து இந்தத் தடுப்பு மருந்து தயாரிக்கப்பட்டுள்ளது. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-ம் கட்டத்துக்குச் செல்லவில்லை என்று கூறப்பட்டது.

இருப்பினும் மருந்தின் மீதான நம்பகத்தன்மையை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் தனது மகளுக்கே இந்த மருந்தைச் செலுத்தினார் ரஷ்ய அதிபர் புதின். ஆனால், உலக ஆய்வாளர்கள் மத்தியில் ரஷ்யா கண்டுபிடித்துள்ள ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து மீது முழுமையான நம்பிக்கை வரவில்லை. உலக சுகாதார அமைப்பும் இந்த மருந்தை அங்கீகரிக்கவில்லை.

இதனால் ரஷ்யா கண்டுபிடித்த தடுப்பு மருந்தை உலக நாடுகளும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தன. இந்த நிலையில் மூன்றாம் கட்டப் பரிசோதனையாக அடுத்த வாரம் 40,000 பேருக்கு ஸ்புட்னிக்-5 தடுப்பு மருந்து செலுத்தப்பட உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

வணிகம்

49 mins ago

சினிமா

1 hour ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

வணிகம்

57 mins ago

இந்தியா

1 hour ago

இணைப்பிதழ்கள்

2 hours ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

மேலும்