கேரள விமான விபத்து; பலியானவர்கள் குடும்பத்துக்கு இறைவன் வலிமையை அளிக்க வேண்டும்: இம்ரான்கான்

By செய்திப்பிரிவு

கேரளாவில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோட்டிற்கு 191 பயணிகளுடன் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் வந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் விமானம் தரை இறங்கும்போது விபத்து ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு 7:38 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது.

மழை காரணமாக விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கியபடி விலகிச் சென்று மோதியது. இதில் முன்பக்கம் விபத்துக்குள்ளாகி நொறுங்கியது. இந்த விபத்தில் இரு விமானிகள் உட்பட 17 பேர் பலியாகினர். 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

இந்த நிலையில் இந்த விமான விபத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இம்ரான்கான் தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிர்கள் பலியானதைத் கேள்விப்பட்டு வருத்தம் அடைந்தேன். இறைவன் இந்தக் கடுமையான சூழலில் அந்தக் குடும்பத்தினருக்கு வலிமையை அளிக்க வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 hours ago

தமிழகம்

31 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்