கரோனா இரண்டாம் கட்ட பரவல் தொடங்கி நீண்ட நாட்களுக்குப் பின்னர் பெய்ஜிங்கில் யாருக்கும் கரோனா தொற்று இன்று உறுதிப்படுத்தப்படவில்லை.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”புதிய கரோனா பரவல் தொடங்கியப் பிறகு பெய்ஜிங்கில் இன்று (செவ்வாய்க்கிழமை) யாருக்கும் கரோனா உறுதிப்படுத்தப்படவில்லை. கரோனா அறிகுறி இல்லாத ஒருவருக்கு கரோனா உறுதிப்படுத்தப்பட்டது ஆனால் இதனை நாங்கள் தொற்றில் சேர்க்கவில்லை” என்று தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜூன் 11 ஆம் தேதி முதல் பெய்ஜிங் அரசு சுமார் 1 கோடிக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா பரிசோதனைகளை நடத்தியுள்ளது. இதன் விளைவாக தற்போது கரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது.
முன்னதாக, சீனத் தலைநகர் பெய்ஜிங் அருகே உள்ள அக்சின் என்ற பகுதியில் கடந்தசில நாட்களாக கரோனா வைரஸ் மீண்டும் பரவத் தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அங்குள்ள ஒரு இறைச்சி சந்தையில் பணிபுரிவோரிடம் இருந்து இந்த வைரஸ் பரவியிருக்கக் கூடும் என சந்தேகிக்கப்பட்டது. சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பெய்ஜிங் முழுவதும் முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள பள்ளி, கல்லூரிகள், தொழில் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், கடைகள்,திரையரங்குகள் மூடப்பட்டன.
ஒரு வீட்டில் இருந்து நாளொன்றுக்கு ஒருவர், ஒரு முறைமட்டுமே வெளியே வரலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
18 mins ago
விளையாட்டு
45 mins ago
விளையாட்டு
47 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
54 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
சினிமா
1 hour ago
உலகம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago