பிலிப்பைன்ஸில் கரோனா பாதிப்பு 25,930 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

பிலிப்பைன்ஸில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 25,930 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து பிலிப்பைன்ஸ் சுகாதாரத் துறை தரப்பில், “பிலிப்பைன்ஸில் கடந்த 24 மணி நேரத்தில் 539 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25,930 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவிட்- 19 காய்ச்சலுக்குத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, அமலுக்கு வரும் வரையில் பள்ளிகள் திறக்கப்படாது என்று பிலிப்பைன்ஸ் அறிவித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. இதுவரை 78,93,700 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4,32,922 பேர் கரோனாவுக்குப் பலியாகி உள்ளனர்.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன.

தற்போதைய நிலவரப்படி கரோனா பாதிப்பு தென் அமெரிக்கா மற்றும் தெற்காசிய நாடுகளில் அதிக அளவில் உள்ளதால், பொதுமக்கள் பொதுவெளியில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

5 hours ago

இந்தியா

16 mins ago

சினிமா

11 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

40 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

5 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்