ஆஸ்திரேலியாவில் நிறவெறி போராட்டத்தில் கலந்து கொண்ட சிலருக்கு கரோனா தொற்று உறுதிப்பட்டதைத் தொடர்ந்து இது போன்ற போராட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்த மாதம் 25-ம் தேதி ஜார்ஜ் ஃபிளாய்ட் (46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீஸார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப் பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின் (44) என்ற போலீஸ் அதிகாரி, ஃபிளாய்டைக் கீழே தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்துப் பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதையடுத்து உலகின் பல பகுதிகளில் போராட்டம் வெடித்தது. ஆஸ்திரேலியாவிலும் இம்மாதிரியான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் விக்டோரியா மாகாணத்தில் நடந்த இனவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டவர்களில் 8 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக விக்டோரியா மாகாண அரசு தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டு மக்களை இனவாத போரட்டம் உள்ளிட்ட எந்த போராட்டங்களிலில் கலந்து கொள்ள வேண்டாம் என்று ஆஸ்திரேலிய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறும்போது, “ மக்கள் யாரும் இம்மாதிரியான போராட்டங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்ற தெளிவான செய்தி கிடைத்துள்ளது. ஏனென்றால் இது மருத்துவ அறிவுரைகளுக்கு எதிரானது. மக்கள் யாரும் இம்மாதிரியான போராட்டங்களில் கலந்துக் கொள்ள கூடாது” என்று கேட்டுக் கொண்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
7 mins ago
தமிழகம்
54 mins ago
இலக்கியம்
6 hours ago
தமிழகம்
1 hour ago
இணைப்பிதழ்கள்
6 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago