இராக்கில் கரோனா பாதிப்பு 16,675 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

இராக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 1,261 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இராக்கில் கரோனா பாதிப்பு 16,675 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இராக் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “இராக்கில் கரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் 1,261 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,675 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 457 பேர் பலியாகி உள்ளனர். 6,568 பேர் குணமடைந்துள்ளனர். சுமார் 3 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனாவுக்கான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால் இராக்கில் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

மேலும் பொது சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தவும் இராக் அரசு திட்டமிட்டுள்ளது. கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவதில் இராக் அரசுக்கு சீன அரசு உதவி செய்து வருகிறது. மருத்துவ சோதனை நிலையங்கள் உள்ளிட்ட வசதிகளையும் சீன அரசு இராக்கிற்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. மேலும், மூன்று மருத்துவக் குழுக்களை இராக்குக்கு சீனா அனுப்பியுள்ளது.

கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 mins ago

தமிழகம்

5 mins ago

தமிழகம்

18 mins ago

சினிமா

47 mins ago

க்ரைம்

28 mins ago

தமிழகம்

50 mins ago

தமிழகம்

41 mins ago

தொழில்நுட்பம்

23 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

மேலும்