ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் தொடரும்: ஜெர்மனி

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸைக் கட்டுப்படுத்த சமூக இடைவெளி விதிகளை ஜூன் 29 ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது ஜெர்மனி அரசு.

இதுகுறித்து ஜெர்மன் அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், “கரோனா வைரஸைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து ஜூன் 29 ஆம் தேதி வரை சமூக இடைவெளி விதிகள் மற்றும் சில கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜெர்மனி கடந்த சில வாரங்களுக்கு முன்னர்தான் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தியது. 8.3 கோடி மக்கள்தொகையைக் கொண்டிருக்கும் ஜெர்மனியில் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்றுக்கான பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 1,81,288 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,498 பேர் பலியாகியுள்ளனர்.1,62,000 பேர் குணமடைந்துள்ளனர்.

ஜெர்மனியில் கரோனா தொற்று குறைந்துள்ள நிலையில் அடுத்த சில நாட்களில் கடைகள், பள்ளிகள், விடுதிகள், உணவகங்கள் உள்ளிட்டவற்றைத் திறக்கத் திட்டமிட்டு வருகிறோம். தற்போது ஜெர்மன் கரோனா பரவலின் முதல் கட்டத்தைக் கடந்துவிட்டாலும், தொடர்ந்து சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என்று ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்கல் சில வாரங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

கரோனா வைரஸ் பரவலால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அதை மீட்டெடுக்கும் நோக்கில் ஜெர்மனி தற்போது இறங்கியுள்ளது.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 56,86,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 24,30,788 பேர் குணமடைந்த நிலையில் 3,52,227 பேர் பலியாகி உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

4 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்