பாகிஸ்தான் அமைதியான சூழ்நிலையை விரும்புகிறது அதற்காக இது பாக்.-ன் பலவீனம் என்று நினைத்தால் அவ்வளவுதான்: பாக்.வெளியுறவு அமைச்சர்

By ஏஎன்ஐ

பாகிஸ்தான் அமைதியான சூழ்நிலையை விரும்புகிறது அதற்காக இது பாகிஸ்தானின் பலவீனம் என்று நினைத்து விடக்கூடாது என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமது குரேஷி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ரம்ஜான் பண்டிகையன்று அவர் கூறியதாவது:

பாகிஸ்தான் எப்போதும் அமைதியான சூழ்நிலையையே விரும்புகிறது அதற்காக இதை பாகிஸ்தானின் பலவீனம் என்று நினைக்க வேண்டாம்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய ராணுவம் தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் நாங்கள் அதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். கடுமையான பதிலடி கொடுப்போம்.

காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடக்கின்றன. இது குறித்து ஐநா மற்றும் முஸ்லிம் நாடுகள் கூட்டமைப்பிடம் வலியுறுத்தி வருகிறோம்.

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பொய்ப்பிரச்சாரம் செய்து வருவதையும் இந்த அமைப்பிடம் வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தொழில்நுட்பம்

3 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

இந்தியா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்