உலக அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 5,400க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு கூறும்போது, “உலகம் முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா தொற்றுக்கு 5,400 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றுக்குப் பலியானவர்கள் எண்ணிக்கை 2,60,000 ஆக அதிகரித்துள்ளது. மேலும் ஒரு நாளில் 87,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 40,14,331ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதில் உலக வல்லரசான அமெரிக்கா நோய்த்தொற்று ரீதியாயாகவும் , பொருளாதார ரீதியாகவும் கடுமையான பாதிப்பைச் சந்திந்துள்ளது. ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் போன்ற நாடுகள் கரோனா தொற்றால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ளன.
அமெரிக்காவில் அதிகபட்சமாக கரோனா தொற்றால் 13, 22,163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 78,616 பேர் பலியாகியுள்ளனர். 2,23,749 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த நிலையில் உலக நாடுகள் பொருளாதார ரீதியாக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ஊரடங்கை மெல்லத் தளர்த்தி வருகின்றன. அவ்வாறு ஊரடங்கைத் தளர்த்தும் பட்சத்தில் அதில் அரசுகள் கவனமாக இருக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு முன்னரே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இந்தியா
51 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
3 hours ago
கல்வி
3 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
சினிமா
4 hours ago