ஈரானில் கரோனா தொற்று பரவல் குறைந்த வந்த நிலையில் மீண்டும் அதிகரித்து வருகிறது. தற்போதுவரை அங்கு கரோனா தொற்று 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகி உள்ளது. ஈரானில் பிப்ரவரி மாதம் பரவ தொடங்கி கரோனா மார்ச் மாதம் தீவிரத்தை அடைந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பரவ தொடங்கி உள்ளது அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுகுறித்து ஈரான் சுகாதார அமைச்சகம் கூறும்போது, ”ஈரானில் கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1,680 பேர் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடந்து அங்கு கரோனாவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை 101,650 ஆக அதிகரித்துள்ளது. கடந்த மூன்று , நாட்களாக ஈரானில் கரோனா தொற்று அதிகரித்து வருவது அச்சத்தை தருகிறது.
நாம் கடந்த சில நாட்களாக நடந்து கொண்ட தனி நபர் சார்ந்த பழக்க வழக்கங்களால் இந்த தொற்று அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. நாம் பழக்கத்தை மாற்றி கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளது.
ஈரானில் கரோனா தொற்றுக்கு 6,418 பலியாக, 81,587 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
உலக முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்புக்கு 37, 27,865 பாதிக்கப்பட்டுள்ளனர். 2,58,340 பலியாகியுள்ளனர். 12, 42,393 பேர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
தமிழகம்
11 mins ago
சினிமா
15 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
29 mins ago
இந்தியா
19 mins ago
சினிமா
37 mins ago
இந்தியா
51 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago