ஆப்கானிஸ்தானில் மெல்ல அதிகரிக்கும் கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

ஆப்கானிஸ்தானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,894 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால் உலகம் முழுவதும் 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,894 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸுக்கு 190க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,894 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா வைரஸால் 90 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆப்கானிஸ்தானில் 300க்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் இனி வரும் நாட்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது அரசுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

24 mins ago

விளையாட்டு

26 mins ago

இந்தியா

27 mins ago

இந்தியா

29 mins ago

சினிமா

32 mins ago

தமிழகம்

36 mins ago

இந்தியா

39 mins ago

தொழில்நுட்பம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்