கரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்கக் கூடும் என்று அமெரிக்கா மீண்டும் குற்றம் சுமத்தியுள்ளது.
கரோனா வைரஸ் தொற்று விவகாரத்தில் சீனா வெளிப்படையாக இல்லை என்று அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகிறது. அந்த வகையில் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ மீண்டும் சீனாவை விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, ''கரோனா வைரஸ் குறித்து சீனாவுக்கு நவம்பர் மாதமே தெரிந்திருக்கக் கூடும். உலக சுகாதார அமைப்பு உட்பட அனைத்தும் இந்தத் தொற்றை மெதுவாக அடையாளம் கண்டுள்ளன. இந்த விவகாரத்தில் வெளிப்படைத் தன்மை முக்கியமானது. நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் என்ன நடந்தது என தற்போது அறிந்து கொள்வது முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் தொடர்பாக சீனா எந்தத் தகவலையும் மறைக்கவில்லை. எனவே, சீன அரசின் கட்டளைக்குப் பணியும் நாடு போல் அமெரிக்கா அணுகத் தேவையில்லை என்று சீனத் தூதர் லியு சியாமிங் நேற்று தெரிவித்திருந்தார்.
கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அமெரிக்கா, சீனா மீது குற்றம் சாட்டியது. இது தொடர்பாக ஆய்வு செய்ய தங்களை சீனா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியது. ஆனால், அமெரிக்காவை அனுமதிக்க சீனா மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் தொற்றுக்கு 8,86,709 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50,243 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
18 mins ago
தமிழகம்
34 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago