ஸ்பெயினில் கரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது

By செய்திப்பிரிவு

நியூசிலாந்தில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஸ்பெயினில் ஞாயிற்றுக்கிழமை 1,536 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் ஸ்பெயினில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,95,944 லிருந்து 2,00, 210 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கு பிறகு கரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்த நாடாக ஸ்பெயின் கருதப்படுகிறது.

ஸ்பெயினில் கரோனா பாதிப்புக்கு இதுவரை 20,852 பேர் பலியாகி உள்ளனர்.

முன்னதாக, ஸ்பெயினில் கணிசமான அளவு கரோனா வைரஸ் தொற்று மற்றும் பலி எண்ணிக்கை குறைந்து வருவதைத் தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு சிறிது தளர்த்தப்பட்டது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

24,07,439 பேர் கரோனா தொற்றால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 6,25,202 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

14 mins ago

கல்வி

34 mins ago

ஆன்மிகம்

51 mins ago

ஆன்மிகம்

59 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்