கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்க ஓமனிலும் ஊரடங்கு நீட்டிப்பு

By செய்திப்பிரிவு

ஓமனில் கரோனா பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் மட்டும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஓமன் ஊடகங்கள் தரப்பில், ''ஓமனில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகம் உள்ள இடங்களில் தொடர்ந்து ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு உத்தரவிட்டுள்ளது. புதிய ஊரடங்கு உத்தரவு இன்று (வியாழக்கிழமை) முதல் கடைப்பிடிக்கப்படுகிறது” என்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் கரோனா தொற்றைத் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓமனில் இன்று மட்டும் நூற்றுக்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஓமனில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தைக் கடந்துள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கரோனா தொற்றுக்கு அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 20,83,913 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 1,34,658 பேர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

19 mins ago

விளையாட்டு

12 mins ago

தமிழகம்

39 mins ago

க்ரைம்

50 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்