பாகிஸ்தான் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,988 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “பாகிஸ்தானில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,988 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுக்கு பாகிஸ்தானில் 107 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இதுவரை 73,439 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 3,308 பேருக்கு கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கரோனா சிகிச்சைப் பணிகளில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தானில் சுமார் 100க்கும் அதிகமான மருத்துவர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். பஞ்சாப் மற்றும் சிந்து மாகாணங்கள் கரோனா தொற்றால் அதிகம் பாதிப்படைந்துள்ளன.
உலகம் முழுவதும் 20 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு லட்சத்து 26 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். 4 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago