கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 255 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.
கரோனா வைரஸ் தொற்றைக் கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன. இந்த நிலையில் கரோனா தொற்று முழுமையாக நீங்கும்வரை உலக நாடுகள் ஊரடங்கு உத்தரவைத் தளர்த்தக் கூடாது என்று உலக சுகாதார அமைப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த நிலையில் உலக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டவர்கள் எண்ணிக்கை 18 லட்சத்து 12 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 255 ஆக உயர்ந்துள்ளது. 4 லட்சத்து 15 ஆயிரத்து 274 பேர் சிகிச்சை முடிந்து குணமடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் பலியானோர் எண்ணிக்கை 21435 பேர் உயிரிழந்துள்ளனர். இத்தாலியில் 19899 பேரும், ஸ்பெயினில் 16972 பேரும், பிரான்ஸில் 13832 பேரும் பலியாகியுள்ளனர்.
பிரிட்டனில் கரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.அங்கு இன்று ஒரே நாளில் 737 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து பிரிட்டனில் கரோனாவுக்கு மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,612 ஆக அதிகரித்துள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
24 mins ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
இந்தியா
7 hours ago
க்ரைம்
8 hours ago