ஸ்பெயினில் ஒரே நாளில் கரோனா வைரஸுக்கு 932 பேர் பலியாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரான்ஸில் கரோனா வைரஸுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து ஏஎஃப்பி வெளியிட்ட செய்தியில், “ஸ்பெயினில் 24 மணிநேரத்தில் 932 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து கரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 10,000 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை 1,12,065 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஸ்பெயினில் கரோனா தொற்று பாதிப்பு சதவீதம் குறைந்து வருவதாக ஸ்பெயினின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 190 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. கரோனா வைரஸ் தொற்றால், அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.
உலக அளவில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனா வைரஸ் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
32 secs ago
இந்தியா
4 mins ago
சுற்றுலா
28 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago