ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா வைரஸுக்கு 117 பேர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஈரானில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் கோவிட்-19 காய்ச்சல் பாதிப்புக்கு 117 பேர் பலியாகினர். இதனைத் தொடர்ந்து ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 2,577 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானில் சுமார் 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் கோவிட்-19 காய்ச்சலால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஈரான் மக்கள் தொடர்ந்து சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து புதிய வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்த நிலையில் ஈரானுக்கு உதவ அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்வந்த நிலையில் ஈரான் அந்த உதவிகளை மறுத்துவிட்டது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கோவிட்-19 காய்ச்சலால் ஈரான் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 7 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
இந்தியா
2 mins ago
சினிமா
26 mins ago
தமிழகம்
27 mins ago
தமிழகம்
43 mins ago
தமிழகம்
55 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago