சீனாவில் புதிதாக 45 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு: 5 பேர் பலி

By செய்திப்பிரிவு

சீனாவில் புதிதாக 45 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 5 பேர் பலியாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட சீனாவில், சமீப நாட்களாக புதிதாக கரோனா வைரஸ் தொற்று பரவல் கணிசமான அளவில் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் சீனாவில் மீண்டும் கோவிட்-19 (கரோனா வைரஸ்) நோய்த்தொற்று புதிதாக 45 பேருக்கு ஏற்பட்டுள்ளது என்று சீன சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சீனாவில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இதுவரை 81,439 பேர் பலியாகினர். சுமார் 3,300 பேர் பலியாகினர். சுமார் 75 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஹாங்காங்கில் சுமார் 560 பேர் கோவிட்-19 காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் பலியாகியுள்ளனர்.

சீனாவின் ஹூபெய் மாகாணம் வூஹான் நகரில் உருவான கோவிட்-19 வைரஸ், 150-க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கோவிட்-19 பாதிப்பு அதிகமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கோவிட்-19 காய்ச்சலுக்கு சுமார் 6 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 30,000 பேர் பலியாகியுள்ளனர். கோவிட்-19 காய்ச்சலுக்கு ஐரோப்பிய நாடுகளான இத்தாலியும், ஸ்பெயினும் அதிக அளவிலான உயிர் பலியைக் கொடுத்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

11 mins ago

தமிழகம்

52 mins ago

தமிழகம்

40 mins ago

தமிழகம்

56 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்