ஈரானில் கரோனா வைரஸுக்கு 24 மணிநேரத்தில் 157 பேர் பலி

By செய்திப்பிரிவு

ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 157 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸ் பலி எண்ணிக்கை 2,234 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து ஈரான் சுகாதாரத் துறை அமைச்சர் கூறும்போது, “ ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 157 பேர் பலியானதைத் தொடர்ந்து அங்கு கோவிட் காய்ச்சலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 2,234 ஆக அதிகரித்துள்ளது. ஈரானில் கோவிட்-19 காய்ச்சலுக்கு இதுவரை 29,406 பேர் பலியாகியுள்ளனர். 10,000 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று
தெரிவித்துள்ளார். .

ஈரானில் கோவிட் காய்ச்சலால் இறப்பு விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் வழிபாடுகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களும் மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கோவிட் காய்ச்சல் பரவலைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் ஈரானுக்கு உதவ அமெரிக்கா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன. ஆனால் இந்நாடுகளின் மருத்துவ உதவிகளை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனினும், ஈரான் பிற நாடுகளின் உதவிகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கோவிட் -19 (கரோனா வைரஸ்) காய்ச்சலுக்கு இதுவரை உலக அளவில் 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 21 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

26 mins ago

சினிமா

31 mins ago

தமிழகம்

49 mins ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்