கரோனா வைரஸுக்கு கலிபோர்னியாவில் ஒருவர் பலி: ஃபுளோரிடா, வாஷிங்டனில் அவசர நிலை பிரகடனம்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸுக்கு கலிபோர்னியாவில் முதல் மரணம் ஏற்பட்டத்தைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில், “அமெரிக்காவில் 16 மாகாணங்களில் கரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 150 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கலிபோர்னியாவில் கரோனா வைரஸுக்கு ஒருவர் பலியான நிலையில் அங்கு அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஃபுளோரிடா, வாஷிங்டன் ஆகிய நகரங்களில் கரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அங்கும் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. மேலும் கோவிட்-19 காய்ச்சலுக்கான பரிசோதனையை நாடு முழுவதும் விரிவுபடுத்த வெள்ளை மாளிகை நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகம் முழுவதும் 90,000க்கும் அதிகமானவர்கள் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத் தலைநகரான வூஹானில் இருந்து நாடு முழுவதும் பரவிய கரோனா வைரஸ், தற்போது சீனாவில் மட்டுமின்றி உலகம் முழுதிலும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தென்கொரியா, ஜப்பான், ஈரான், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கரோனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை 3,000க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்