உலக மசாலா: சியர் கேர்ள்ஸ் மாதிரி ஆபிஸில் சியர் லீடர்ஸ்!

By செய்திப்பிரிவு

சீன நிறுவனம் ஒன்று தங்களுடைய ஆண் ஊழியர்கள் உற்சாகமாக வேலை செய்வதற்கு சியர்லீடர்களைப் பணியில் அமர்த்தியிருக் கிறது. புரோகிராமிங் சியர்லீடர்கள் என்று அழைக்கப்படும் 3 பெண்கள், ஆண் ஊழியர்களிடம் உற்சாகமாக உரையாடுகிறார்கள். பிங்-பாங் விளையாடுகிறார்கள். பாடுகிறார்கள். அவர்களுக்குப் பிடித்த உணவுகளை வாங்கிக் கொடுக்கிறார்கள். இப்படியெல்லாம் செய்வதன் மூலம் ஊழியர்கள் மிகவும் உற்சாகத்துடன் வேலை செய்கி றார்கள்.

ஊழியர்கள் சோர்வாக இருந்ததை அறிந்த மனிதவள மேம்பாட்டு அதிகாரியின் ஆலோசனையில் அந்த நிறுவனத்தில் சியர்லீடர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர். பெண்கள் உற்சாகமாக வேலை செய்வதற்கு ஆண் சியர்லீடர்கள் உண்டா என்று அந்த நிறுவனத்தின் பெண் ஊழியர்கள் கேட்டனர். ‘‘பெண்களுக்கு சியர்லீடர்கள் தேவையே இல்லை. வேலை என்று வந்துவிட்டால் அளவுக்கு அதிகமாகவே உழைக்கிறார்கள்’’ என்று பதில் அளித்திருக்கிறார் மனிதவள மேம்பாட்டு அதிகாரி.

இதெல்லாம் ரொம்ப அநியாயம்… ஊழியர்களை உற்சாகப்படுத்த வேறு வழியே இல்லையா?

அமெரிக்காவில் உள்ள இண்டியானாவில் வசிக்கிறார் 38 வயது ஜெசிகா ஹயெஸ். சமீபத்தில் ஒரு தேவாலயத்தில் அவருக்குத் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆனால் அந்தத் திருமணத்தில் மணமகனை யாரும் பார்க்க முடியவில்லை. ஏனென்றால் ஜெசிகா திருமணம் செய்திருப்பது இயேசு கிறிஸ்துவை! இறையியல் ஆசிரியராக பிஷப் ட்வெங்கெர் பள்ளியில் பணியாற்றி வரும் ஜெசிகா, தன்னை இயேசுவுக்கு அர்ப்பணித்துவிட்டார்.

இனிமேல் ஜெசிகா யாரையும் திருமணம் செய்துகொள்ள மாட்டார். இயேசுவின் மனைவியாக மாறிவிட்டாலும் ஜெசிகா, வழக்கமான சாதாரண வாழ்க்கையைத்தான் மேற்கொண்டு வருகிறார். ‘’எத் தனையோ பேர் இயேசுவைத் திருமணம் செய்துகொள்ள விரும்புகி றார்கள். நான் அதைச் செயல்படுத்திக் காட்டிவிட்டேன். அதனால் என் மீதி வாழ்க்கை முழுவதும் பிரார்த்தனையில் கழிக்கவே விரும்புகிறேன். வெள்ளை ஆடையும் மோதிரமும் எப்பொழுதும் என் திருமணத்தை நினைவூட்டிக்கொண்டே இருக்கப் போகின்றன’’ என்கிறார் ஜெசிகா.

ஆண்டாள், மீராவின் வரிசையில் ஜெசிகா!

சீனாவின் சோங்க்விங் பகுதி காவல் நிலையத்துக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தன்னுடைய காதலி தற்கொலை செய்துகொள்வதாகத் தகவல் அனுப்பியிருக்கிறார். உடனே இந்த முகவரிக்குச் சென்று அவரைக் காப்பாற்றும்படி ஒருவர் கேட்டுக்கொண் டார். காவலர்கள் அந்த முகவரிக்குச் சென்றனர். 10 நிமிடங்கள் தட்டிப் பார்த்தும் கதவு திறக்கப்படவில்லை. பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கே ஒரு பெண் ஆவேசமாக நின்றுகொண்டிருந்தார்.

பூட்டை உடைத்து எப்படி வீட்டுக்குள் நுழையலாம் என்று கத்தினார். தற்கொலையைத் தடுப்பதற்காகவே பூட்டை உடைத்ததாகக் காவலர்கள் சொன்னார்கள். தகவல் அறிந்து வீட்டின் உரிமையாளர் அங்கு வந்தார். உடைத்த கதவைச் சரி செய்து கொடுக்கும்படி அந்தப் பெண்ணைக் கேட்டுக்கொண்டார். ‘‘பூட்டை உடைத்தவர்கள்தான் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். நான் விளையாட்டுக்கு என் காதலரிடம் தற்கொலை செய்வதாகச் சொன்னேன். அதை உண்மை என்று நம்பி வந்து, பூட்டை உடைத்த காவலர்கள்தான் இதற்குப் பொறுப்பு’’ என்று சொல்லிவிட்டார் அந்தப் பெண். காவலர்கள் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

இப்படி எல்லாமா விளையாடுவார்கள்?

இங்கிலாந்தில் வசிக்கும் பெர்தா எனும் முயலுக்கு மோசமான விபத்தின் மூலம் இடுப்பு எலும்பு உடைந்துவிட்டது. முயலால் நகரக்கூட முடியவில்லை. உரிமையாளர் மெலானி ஜேம்ஸ் பெர்தாவின் பிரச்சினையைத் தீர்க்க முடிவு செய்தார். ஒரு சிறப்புச் சக்கர நாற்காலியை உருவாக்கினார். அதை பெர்தாவின் உடலோடு சேர்த்துக் கட்டினார்.

இப்பொழுது பெர்தா எளிதாக நகர்ந்து செல்ல முடிகிறது. ’’நான்கு ஆண்டுகளாக பெர்தாவை வளர்த்து வருகிறேன். இடுப்பு எலும்பு உடைந்தபோது நான் மிகவும் துன்புற்றேன். நாய்களுக்குச் சக்கர நாற்காலி கொடுக்கும் செய்திகளைக் கேள்விப்பட்டு, பெர்தாவுக்கும் ஏற்பாடு செய்தேன். ஒவ்வொரு விஷயத்துக்கும் என்னை எதிர்பார்த்துக்கொண்டிருந்த பெர்தா, இப்போது தானே சுதந்திரமாக எங்கும் சென்று வருவது குறித்து எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்கிறார் மெலானி ஜேம்ஸ்.

பெர்தா சார்பாக மெலானிக்கு நன்றி!



VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்