பிடிக்காத திருமணத்திற்கு பயந்து சாமியாராகிப் போனவர்களை நாம் நிஜ வாழ்விலும் கதைகளிலும் சினிமாக்களிலும் கேள்விப்பட்டிருக்கிறோம், ஆனால் சீனாவில் விநோத பயம் ஆட்கொள்ள திருமணத்தை வெறுத்து சிறையே பரவாயில்லை என்று திருடி விட்டு ஒரு நபர் சிறை சென்றுள்ள சம்பவம் நடந்துள்ளது.
திருமண செய்துகொள்ள வற்புறுத்திய காதலியிடம் இருந்து தப்பிக்க வேண்டுமென்றே திருடி வாலிபர் ஒருவர் சிறைக்குச் சென்று உள்ளார். சீனாவில் இது பலருக்கும் சிரிப்பை வரவழைத்த சம்பவமாக நடந்தேறியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த இளைஞர் சென். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அப்பெண் ஜென்னிடம் அடிக்கடி தொந்தரவு அளித்துள்ளார். அதற்கு சென் மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்தக் காதலி விடுவதாக இல்லை.
ஒரு கட்டத்துக்கு மேல் பொறுக்கமுடியாத சென், அருகில் இருந்த நடன ஸ்டூடியோவுக்கு சென்று அங்கிருந்த ரூ.17 ஆயிரம் மதிப்புள்ள ஸ்பீக்கரை திருடியுள்ளார். திருட்டு புகாரில் உடனடியாக அவரைப் போலீசார் கைது செய்தனர். மகிழ்ச்சியாக கைதான சென், காதலியிடம் இருந்த தப்பிக்க வேறு வழி தெரியவில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், நிச்சயம் போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என்று தனக்குத் தெரியும் எனவும் சிரித்துக் கொண்டே அவர் தெரிவித்துள்ளார். ஆனாலும் இவரது திட்டம் பலித்ததா, காதலி இவரைப் பிரிந்து சென்றாரா என்பதெல்லாம் தெரியவில்லை, ஆனால் இது சமூகவலைத்தளவாசிகளை ஈர்க்க பலரும் நகைச்சுவையாக கருத்துக்களை பதிவிட்டு வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
இந்தியா
14 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
33 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago