இஸ்ரேல் படை தாக்குதலில் பாலஸ்தீனர்கள் 3 பேர் பலி

By செய்திப்பிரிவு

காசாவில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனர்கள் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இஸ்ரேல் ராணுவம் தரப்பில், “பாலஸ்தீனப் போராட்டக்காரர்கள் எல்லை கடந்து எங்களைத் தாக்க எண்ணினர். இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனர்கள் மூன்று பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்” என்றார்.

இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் தாக்குதலுக்கு ஹமாஸ் தீவிரவாதக் குழுவிடமிருந்து இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.

கடந்த 1967-ல் மத்திய கிழக்குப் போர் நடைபெற்றபோது கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் கைப்பற்றியது. ஒருங்கிணைந்த ஜெருசலேமே தங்கள் தலைநகரம் என்று அந்நாடு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துவரும் பாலஸ்தீனர்கள், வருங்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் எங்கள் தலைநகராக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.

பெரும்பாலான உலக நாடுகள் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக ஏற்கவில்லை. இந்த நிலையில் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்தார். இதனைத் தொடர்ந்து இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே மோதல் வலுத்துள்ளது.

மேலும், காசா எல்லையில் இஸ்ரேல் ராணுவத்தின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பாலஸ்தீனர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

50 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

40 mins ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

வலைஞர் பக்கம்

3 hours ago

மேலும்