ஈரான் புரட்சிப் படைத் தளபதி சுலைமானைக் கொன்ற அதே நாளில் ஏமனில் மற்றொரு ஈரான் தளபதியையும் கொல்ல அமெரிக்கா திட்டமிட்டதாகவும் ஆனால் திட்டம் தோல்வி அடைந்ததாகவும் அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரான் படையின் தளபதி காசிம் சுலைமானைக் கடந்த 3-ம் தேதி பாக்தாத் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணை வீசிக் கொன்றது. இந்தத் தாக்குதலில் காசிம் சுலைமான், அவரின் மருமகன் முகந்தியாஸ் உள்பட 8 பேர் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.
இந்தச் சூழலில் ஈராக்கில் பாக்தாத் அருகே இருக்கும் 'அன் அல் ஆசாத்' மற்றும் 'ஹாரிர் கேம்ப்' ஆகிய விமான தளங்களைக் குறிவைத்து ஈரான் ராணுவம் நேற்று முன் தினம் தாக்குதல் நடத்தியது. இதில் 80 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக ஈரான் தெரிவித்தது. இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.
இந்த நிலையில் ஈரான் தளபதி சுலைமானைக் கொன்ற அதே நாளில் ஏமனில் உள்ள ஈரான் முக்கிய படைத் தளபதியான அப்துல் ராசாவை அமெரிக்கப் படைகள் குறிவைத்ததாகவும், ஆனால் இந்தத் திட்டம் தோல்வி அடைந்ததாகவும் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதுகுறித்த முழுமையான தகவலை அமெரிக்க ராணுவம் வெளியிடவில்லை.
முக்கிய செய்திகள்
இந்தியா
38 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
3 hours ago
இந்தியா
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago