அமெரிக்க படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் பொருளாதாரத் தடைகளுக்கு இராக் ஆளாகும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாக்தாத் விமானம் நிலையம் அருகே அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் படை தளபதி சுலைமான் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வெளிநாட்டு படைகளை தங்கள் நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு அரசு அழைப்புவிடுத்த தீர்மானம் ஒன்றுக்கு இராக் நாடாளுமன்றம் சாதகமாக வாக்களித்தது.
இந்த நிலையில் இதனை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
இதுகுறித்து ட்ரம்ப் கூறும்போது, ”பல பில்லியன் டாலர் மதிப்பிலான விலை உயர்ந்த விமான தளங்களை கட்ட அமெரிக்கா அளித்த பணத்தை இராக் திரும்ப அளிக்கும்வரை அமெரிக்க படைகள் அந்நாட்டிலிருந்து வெளியேறாது. எங்கள் படைகளை வெளியேற கட்டாயப்படுத்தினால் நாங்கள் அவர்கள் இதற்கு முன்னர் பார்த்திருந்த வகையில் பொருளாதார தடைகளை விதிப்போம் ” என்றார்.
முன்னதாக, பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானம் மூலம் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதில் ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப் படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல் வலுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
ஆன்மிகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
2 hours ago
கருத்துப் பேழை
3 hours ago