ஜெர்மனியில் பிரபல மிருகக் காட்சி சாலையில் தீ: விலங்குகள் பலி

By செய்திப்பிரிவு

ஜெர்மனியில் உள்ள கிரெஃபெல்ட் மிருகக் காட்சி சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல விலங்குகள் பலியாகின.

மேற்கு ஜெர்மனியில் அமைந்துள்ளது கிரெஃபெல்ட் மிருகக் காட்சி சாலை. இங்கு புத்தாண்டு தொடங்குவதற்கு சில மணிநேரங்கள் முன்னர் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் 30க்கும் அதிகமான விலங்குகள் பலியாகின.

தீ விபத்து சம்பவம் குறித்து மிருகக் காட்சி சாலை நிர்வாகம் தரப்பில், ''எங்களது மோசமான பயம் நனவாகிவிட்டது. பல விலங்குகள் இறந்துவிட்டன. நாங்கள் இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை. எங்களுக்கு உதவ விரும்பியவர்களுக்கு மிக்க நன்றி” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தை இதுவரை மிருகக் காட்சி சாலை நிர்வாகம் ஊடகங்களிடம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.

இந்நிலையில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தையொட்டி வெடித்த பட்டாசுகளால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தீ விபத்து ஏற்பட்ட மிருகக் காட்சி சாலையில் ஒராங்குட்டான்கள், சிம்பன்சிகள் மற்றும் கொரில்லாக்கள் என பல்வேறு வகையான குரங்கினங்கள் உள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

22 mins ago

இந்தியா

56 mins ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

க்ரைம்

4 hours ago

மேலும்