ஈரானின் மிகப் பெரிய விமான நிறுவனம் மீது அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க கருவூலம் தரப்பில், ''உள்நாட்டுப் போர் நடைபெறும் ஏமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதக் கடத்தலுக்கு உதவியதாக ஈரானின் மிகப்பெரிய விமான நிறுவனமான மகான் மீதும் ஈரானின் கப்பல் நிறுவனம் மீதும் அமெரிக்கா புதிய பொருளாதாரத் தடை விதிக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை அமெரிக்க வெளியுறவு அமைச்சகமும் உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட (ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன், ரஷ்யா, சீனா) 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வத் தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
ஆனால், அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருகிறது. இதன் காரணமாக அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் நிலவி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
9 mins ago
ஓடிடி களம்
30 mins ago
தமிழகம்
19 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
51 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
விளையாட்டு
2 hours ago
இணைப்பிதழ்கள்
2 hours ago