வடகொரியாவின் மீண்டுமொரு ஏவுகணை சோதனையை அடுத்து அந்நாட்டுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.
வடகொரியா முக்கியமான ஏவுகணை சோதனை ஒன்றை வெற்றிகரமாக நடத்தி உள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து வடகொரியாவுக்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்திருக்கிறது அமெரிக்கா.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறும்போது, “வடகொரிய அதிபர் கிம் ஜோங் விரோதமான வழியில் செயல்பட்டால் அனைத்தையும் இழப்பீர்கள். வடகொரிய அதிபர் கிம் அமெரிக்காவுடனான உறவை ரத்து செய்ய விரும்பமாட்டார் என்று நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.
ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.
இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
தமிழகம்
7 mins ago
க்ரைம்
13 mins ago
க்ரைம்
22 mins ago
இந்தியா
18 mins ago
இந்தியா
48 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago