பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறினால் 6 மாதம் சிறை

By பிடிஐ

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறினால் 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அந்த நாட்டு அரசு எச்சரித்துள்ளது.

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் இலையுதிர் கால கூட்டத்தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இதில் புதிய குடியேற்ற மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. இச்சட்டத்தில் பல்வேறு கடுமையான சட்டவிதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேறி பணியாற்றுபவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும். 6 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும். அவர்களின் ஊதியம் பறிமுதல் செய்யப்படும், வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று பிரிட்டிஷ் சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து குடியேற்றத் துறை அமைச்சர் ஜேம்ஸ் புரோக்கர்ஷைர் கூறியபோது, சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்க அரசு கடும் நடவடிக்கை களை எடுக்கும். சட்டவிரோதமாக நாட்டில் குடியேறியவர்களை பணியில் அமர்த்துபவர்களுக்கு 2 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

30 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சினிமா

3 hours ago

க்ரைம்

3 hours ago

மேலும்