இந்தியா பாகிஸ்தான் இடையே, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையிலான பேச்சுவார்த்தை ரத்தானதை தொடர்ந்து, ராணுவ உயரதிகாரிகள் அளவிலான பேச்சு வார்த்தை நடப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பேச்சுவார்த்தையில் பங்கேற்க டெல்லி வரும் பாகிஸ் தான் தேசிய பாதுகாப்பு ஆலோ சகர் சர்தாஜ் அஜிஸ், காஷ்மீர் பிரிவினைவாதிகளைச் சந்திக்கக் கூடாது என இந்தியா நிபந்தனை விதித்தது. இந்த நிபந்தனையை ஏற்க மறுத்த பாகிஸ்தான் பேச்சு வார்த்தையை ரத்து செய்தது.
இந்நிலையில், இரு நாடுகளின், ராணுவ தலைமை இயக்குநர் (ராணுவ செயல்பாடுகள்- டிஜிஎம்ஓ) மற்றும் பாகிஸ்தான் எல்லைப் பாதுகாப்புப் படை தலைவர் ஆகியோர் பங்கேற்கும் பேச்சுவார்த்தை நடப்பதும் உறுதி யற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
எல்லைப்பாதுகாப்புப் படை தலைவர்கள் இடையிலான பேச்சு வார்த்தை செப்டம்பர் 6-ம் தேதி யும், அதன் பிறகு, ராணுவ தலைமை இயக்குநர்கள் (ராணுவ செயல்பாடுகள்) அளவிலான பேச்சுவார்த்தையும் நடைபெறும் என பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
விளையாட்டு
24 mins ago
இந்தியா
25 mins ago
இந்தியா
27 mins ago
சினிமா
30 mins ago
தமிழகம்
34 mins ago
இந்தியா
37 mins ago
தொழில்நுட்பம்
41 mins ago
தமிழகம்
1 hour ago
கல்வி
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago