கனடாவில் வடக்கு பகுதியில் உள்ள கிங்ஸ்டன் நகரம் அருகே ஏற்பட்ட விமான விபத்தில் 7 பேர் பலியாகினர்.
இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவதாவது: ”கனடாவில் கிங்ஸ்டன் அருகே அமெரிக்க எல்லைப் பகுதியில் ’Piper PA-32’ என்ற சிறு அமெரிக்க விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 7 பேர் பலியாகினர். பலியானவர்களில் 5 பேர் அமெரிக்கர்கள். 2 பேர் கனடாவை சேர்ந்தவர்கள். விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.
இந்த சிறு விமானம் மர்கம் விமான நிலையத்திலிருந்து கியூபெக் நகரத்திற்கு செல்லும்போது விபத்து எற்பட்டிருக்கிறது. மேலும் காற்று பலமாக வீசியதன் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்” என்று தெரிவித்துள்ளனர்.
வானிலையில் ஏற்பட்ட கோளாறு மற்றும் ஓட்டுநரின் தவறால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
விமான விபத்து தொடர்பாக வானிலை தகவல்களை பெற இருக்கிறோம் என்று புலனாய்வு அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பலியானவர்களின் முழுமையான விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை.
முக்கிய செய்திகள்
தமிழகம்
21 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
இணைப்பிதழ்கள்
7 hours ago