வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை: தென்கொரியா குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தி இருப்பதாக தென் கொரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென் கொரிய ராணுவம் தரப்பில் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், “வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது. ஆனால் எந்தவிதமான சோதனையை வடகொரியா நடத்தியது என்பது குறித்த தகவல் இதுவரை தெரியவில்லை. மேலும் சர்ச்சைக்குரிய கடற்பகுதியில் வடகொரியா ராணுவப் பயிற்சியையும் நடத்தியுள்ளது” என்று தெரிவித்துள்ளது.

வடகொரியா கடந்த மாதம் கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பானுக்கு இடையே கிழக்கு கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகளை சோதனைகளை நடத்தியது. இவை குறுகிய தூரம் சென்று இலக்கைத் தாக்கும் ஏவுகணைகள் என்று ஜப்பான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கையை அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா ஆகிய நாடுகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன.

ஐக்கிய நாடுகள் சபையில் அமெரிக்கா தலைமையில் வடகொரியாவின் மீது புதிய பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன. எனினும், அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளைப் பொருட்படுத்தாமல் வடகொரியா அவ்வப்போது ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்ததது.

இந்நிலையில் தென்கொரியாவில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. அதுமுதல் வடகொரியா - தென்கொரியா உறவில் இணக்கம் காணப்பட்டு ட்ரம்ப் - கிம் இடையே சந்திப்பு நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, வடகொரிய அதிபர் கிம், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கலந்துகொண்ட உச்சி மாநாடு வியட்நாம் தலைநகரம் ஹானோயில் நடைபெற்றது. இதில் இரு நாடுகளுக்கிடையே எந்த ஒப்பந்தமும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.

இந்நிலையில் அமெரிக்கா - வடகொரியா இடையே அணு ஆயுத சோதனை தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முயற்சிகள் நடந்து வரும் நிலையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

27 mins ago

விளையாட்டு

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

4 hours ago

ஓடிடி களம்

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

5 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்