சிரியா நிலவரம் மற்றும் ஈரான் அணுஆயுத சோதனைகள் குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்பும், பிரான்ஸ் அதிபர் மேக்ரான் தொலைபேசியில் உரையாடல் நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து வெள்ளை மாளிகை தரப்பில், “அமெரிக்கா - பிரான்ஸ் இரு நாடுகளும் சிரியாவில் ஒருங்கிணைந்து செயல்படுவது குறித்தும், ஈரானின் அணுசக்தி தொடர்பான சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்” என்று தெரிவித்துள்ளது.
மேலும் லண்டனில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள நேட்டோ நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு குறித்து இருவரும் ஆலோசித்தனர்.
முன்னதாக, அமெரிக்கா உள்ளிட்ட 6 வளர்ந்த நாடுகளுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த 2015-ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி ஆக்கபூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி வழங்கப்பட்டது. எனினும் அந்நாடு எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்துக் கொள்ளலாம், எந்த அளவுக்கு அதைச் செறிவூட்டலாம் என்ற வரம்பு விதிக்கப்பட்டது.
அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு இந்த ஒப்பந்தத்தில் குறைபாடுகள் உள்ளதாகக் கூறி அதிலிருந்து விலகினார். மேலும் ஈரான் மீது மீண்டும் பொருளாதாரத் தடைகளை விதித்து வருகிறார். இதற்குப் பதிலடியாக ஈரான் அணுசக்தி ஒப்பந்த விதிகளை அடுத்தடுத்து மீறி வருவது குறிப்பிடத்தக்கது.
சிரியாவில் துருக்கி ராணுவ தாக்குதலுக்கு பிறகு, சிரியா மற்றும் துருக்கி படைகள் அவ்வப்போது தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
22 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
51 mins ago
இந்தியா
56 mins ago
இந்தியா
4 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
3 hours ago