ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தொடர் தாக்குதல்: 16 தலிபான்கள் பலி

By செய்திப்பிரிவு

தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக நடந்த தேடுதல் வேட்டையில் 16 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து ஆப்கன் அதிகாரிகள் தரப்பில், “தலிபான்கள் மற்றும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக மூன்று மாகாணங்களில் (நன்கர்ஹர், கந்தஹர், வார்டார்க்) ஆப்கன் பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இதில் கடந்த 24 மணிநேரத்தில் 16 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர். 8 தலிபான் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 10 ஐஎஸ் தீவிரவாதிகளும் கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக, நன்கர்ஹரில் மசூதி ஒன்றில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தொழுகையில் ஈடுபட்டிருந்த 62 பேர் பலியாகினர்.

தலிபான்களுடன் பேச்சுவார்த்தை

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும், ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக் கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை அடிப்படையாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர். இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தை இறந்து விட்டதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இந்நிலையில் ஆப்கனில் அமைதி ஏற்பட, தலிபான்களுடன் அமைதிப் பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

ஜோதிடம்

6 hours ago

மேலும்