கென்யாவில் பள்ளிக்கூடம் சரிந்து விபத்து: 7 பேர் பலி; காயம் 57 பேர்

By செய்திப்பிரிவு

கென்யா தலைநகர் நைரோபியில் பள்ளிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 7 மாணவர்கள் பலியாகினர். 57 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து கென்ய அரசின் செய்தித் தொடர்பாளர் சைரஸ் கூறும்போது, “கென்ய தலைநகர் நைரோபியில் பள்ளிக்கூடம் ஒன்றின் முதல் தளத்தில் ஏற்பட்ட விரிசலில் கட்டிடம் சரிந்தது. இதில் மாணவர்கள் அனைவரும் கட்டிடத்தில் சிக்கிக் கொண்டனர். இதில் 7 மாணவர்கள் பலியாகினர். 57 மாணவர்கள் காயமடைந்தனர். காயமடைந்த மாணவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டிட விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என்றும் இதுகுறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக் கூட விபத்து கென்ய தலைநகரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விபத்தில் பலியான மாணவர்களுக்கு கென்ய அரசு இரங்கல் தெரிவித்துள்ளது.

கென்ய தலைநகர் நைரோபியில் அனுமதி பெறாமல் சுமார் 40,000 கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் அவை இடிந்து விழும் ஆபத்தில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

வாழ்வியல்

2 hours ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

4 hours ago

வாழ்வியல்

1 min ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்