தேர்தலுக்கே முக்கியத்துவம்; அமைதி பேச்சுவார்த்தை பிறகுதான்: ஆப்கானிஸ்தான் 

By செய்திப்பிரிவு

பொதுத் தேர்தலுக்கே முதலில் முக்கியத்துவம் என்று ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஆப்கானிஸ்தான் அதிபரின் பொதுச் செயலாளர் கூறும்போது, “தலிபான்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முன்னர் ஆப்கனில் இம்மாத இறுதியில் பொது தேர்தல் நடத்தப்படுவது மிக அவசியம்”என்று தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தானில் வரும், செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி பொதுத் தேர்தல் நடக்க விருக்கிறது.

ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கு அமைதியான தீர்வு காண்பதில், தேசிய அளவிலும் பிராந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் முயற்சிகள் நடந்து வருகின்றன. மேலும் ஆப்கனில் 18 ஆண்டுகளாக நடந்து வரும் போரிலிருந்து தன்னை விடுத்துவித்துக்கொள்ள அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.

இதனை மையமாகக் கொண்டு ஆப்கன் அமைதிப் பேச்சுவார்த்தை தொடர்பாக 9 சுற்றுகள் அமெரிக்கா தலைமையில் நடந்தது. இதன் அடிப்படையில் ஏற்பட்ட ஒப்பந்தத்தை தலிபான்கள் தரப்பு ஏற்றுக்கொண்ட நிலையில், ஆப்கனில் தலிபான்கள் நடத்திய தீவிரவாதத் தாக்குதலில் அமெரிக்கப் படை வீரர்கள் கொல்லப்பட்டதற்கு தலிபான்கள் பொறுப்பேற்றனர்.

இதனைத் தொடர்ந்து தலிபான்களுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்வதாக ட்ரம்ப் அறிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தலிபான்கள் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

சினிமா

46 mins ago

சினிமா

1 hour ago

க்ரைம்

57 mins ago

தமிழகம்

48 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

32 mins ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்