மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அமைதிப் படை தூதுவராகச் சென்ற இந்திய ராணுவ அதிகாரி ஒருவர் மாயமானார்.
காங்கோ நாட்டில் ஐ.நா. சார்பில் அமைதிப்படை தூதுவர்களை அனுப்பும் நாடுகளில் இந்தியா முக்கியமான நாடாக உள்ளது. அங்கு இந்திய ராணுவ வீரர்கள் பலர் அமைதிப் படையினராக காங்கோவில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
காங்கோவில் அங்குள்ள இந்திய அமைதிப் படை வீரர்களுக்கு நார்த் கிவு மாகாணத்தின் கோமா என்ற நகரில் தலைமையகமும் அமைந்துள்ளது. ராணுவ வீர்ரகள் மட்டும் அல்லாது பொறியாளர்கள், மருத்துவர்கள் குழுக்களையும் இந்தியா காங்கோவுக்கு அமைதி மார்க்கமாக அனுப்பியுள்ளது.
இந்நிலையில் அங்கு பணியாற்றிய இந்திய ராணுவ அதிகாரி கவுரவ் சோலங்கி திடீரென மாயமாகியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 8 ஆம் தேதி கயாகிங் நகரில் உள்ள கிவு ஏரியில் பணிக்குச் சென்ற கவுரவ் அனைத்து வீரர்களும் திரும்பிய நிலையில் அவர் மட்டும் மாயமாகியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து படகு மற்றும் ஹெலிகாப்டர்களைக் கொண்டு கவுரவைத் தேடும் பணி நடந்து வருகிறது. நான்கு நாட்களாகத் தொடர்ந்த பணி முழு வீச்சாக நடந்து வருவதாக அங்குள்ள இந்திய ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
20 mins ago
தமிழகம்
8 mins ago
தமிழகம்
24 mins ago
இந்தியா
48 mins ago
விளையாட்டு
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago
கருத்துப் பேழை
5 hours ago