பிரான்சில் நடைபெறும் ஜி7 மாநாட்டுக்கிடையே பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் ட்ரம்பும் உரையாடினர். இருவரும் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த போது இருவரது நெருங்கிய நட்பு வெளிப்படையாகத் தெரிந்தது.
இருவரும் பேசியது பற்றிய கேள்வி ஒன்றிற்கு பிரதமர் மோடி இந்தி மொழியில், “நாங்கள் முதலில் விவாதித்து விடுகிறோம் பிறகு என்ன தேவையோ உங்களுக்குத் தெரியப்படுத்தப்படும்” என்றார்.
மோடி இந்தியில் பேசியதும் குறுக்கிட்ட அதிபர் ட்ரம்ப், “அவர் உண்மையில் நன்றாக ஆங்கிலம் பேசுகிறார்... ஆனால் இப்போது அவர் பேச விரும்பவில்லை” என்று கூறியவுடன் இருவரும் கைகொடுத்துக் கொண்டு மகிழ, அறையில் இருந்த அனைவரும் சிரித்தனர்.
மேலும் ட்ரம்ப் கூறும்போது, “இருவரும் கடந்த இரவு காஷ்மீர் பற்றி பேசினோம், பிரதமர் மோடி தாங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவே உணர்கிறார். பாகிஸ்தானுடன் பேசி நல்லது செய்ய இருவரும் முயற்சி செய்வார்கள்.
நான் இருநாட்டு பிரதமர்களுக்கும் நல்ல நண்பன். இருநாடுகளும் இதனை தாங்களே கையாள்வார்கள்” என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
58 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
க்ரைம்
3 hours ago
இந்தியா
3 hours ago
சுற்றுலா
3 hours ago