ஒவ்வோர் ஆண்டும் மார்ச் முதல் ஜுன் வரை ஜப்பானின் டோயமா கடற்கரையில் நீல நிற விளக்குகள் ஒளிர்கின்றன. இவை மின்சாரத்தால் இயங்கக்கூடிய விளக்குகள் அல்ல. இயற்கையிலேயே ஒளிரக்கூடிய கணவாய் மீன்கள்தான் கரைக்கு வந்து ஒளியை வெளிவிடுகின்றன. இவை 1,200 அடி ஆழத்தில் வசிக்கக்கூடியவை.
குறிப்பிட்ட சில காலம் மட்டும் அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, கரை ஒதுங்குகின்றன. மின்மினியைப் போலவே இந்தக் கணவாய் மீன்களின் உடலும் ஒளியை உமிழ்கின்றன. எதிரிகளிடமிருந்து தப்பிக்க, இணையை அழைக்க, இரையை அருகில் வரச் செய்ய என்று பலவிதங்களில் ஒளியைப் பயன்படுத்திக்கொள்கின்றன இந்த மின்மினிக் கணவாய்கள்.
பல லட்சக்கணக்கான கணவாய்கள் கரை ஒதுங்கி, இனப்பெருக்கம் செய்து, முட்டைகளை இட்டுச் செல்கின்றன. இரவு நேரங்களில் நீல நிறத்தில் கடற்கரை ஒளிரும் காட்சியைக் காண்பதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிகின்றனர். மின்மினிக் கணவாய்களுக்கு என்றே பிரத்யேகமான அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது.
விசித்திர உயிரினங்கள்!
முக்கிய செய்திகள்
தமிழகம்
25 mins ago
விளையாட்டு
43 mins ago
இந்தியா
55 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago