ஜப்பானில் கடலுக்கு அடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

By ஏஎஃப்பி

ஜப்பான் கடற்பகுதியில் 6.8 ரிக்டர் அளவில் இன்று காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நேபாளம், ஆப்கானிஸ்தான், இந்தோனேசியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்நிலையில், ஜப்பானின் வடகிழக்கு கடற்பகுதியில் 6.8 என்ற ரிக்டர் அளவில் இன்று காலை 6 மணி அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மியாகி கடற்பகுதியில் ஹோன்சு தீவு அருகே 46 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.

தலைநகர் டோக்கியோ உள்ளிட்ட சுற்று வட்டார நகரங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

கடந்த 2011-ம் ஆண்டு ஜப்பானில் நிகழ்ந்த மோசமான நிலநடுக்கம் ஏற்பட்ட அதே பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி பேரலைகள் தாக்கியதில் ஜப்பானில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

இதன் காரணமாக, புகுஷிமாவில் பாதிப்பு ஏற்பட்டு மிகப் பெரிய அளவில் கதிரியக்க கசிவும் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

5 mins ago

சுற்றுச்சூழல்

11 mins ago

இந்தியா

42 mins ago

சினிமா

49 mins ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

சினிமா

2 hours ago

மேலும்