பின்லேடன் மீது அமெரிக்க படையினர் எடுத்த நடவடிக்கையில் பாகிஸ்தானுக்கு எவ்வித பங்கும் இல்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் உள்ள ஒரு பங்களாவில் பதுங்கியிருந்த ஒசாமா பின்லேடனை கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு அமெரிக்க படை யினர் சுட்டுக்கொன்றனர். பாகிஸ் தான் அரசுக்கோ, ராணுவத்துக்கோ தெரியாமல் இந்த சம்பவம் நடந்த தாக அப்போது தகவல் வெளியா னது. இது இறையான்மையை மீறிய செயல் என்று பாகிஸ்தான் அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.
இந்நிலையில், பின்லேடன் மீது அமெரிக்க படையினர் எடுத்த நடவடிக்கை பற்றி பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயின் அப்போதைய தலைவருக்கும், ராணுவ தலைமை தளபதிக்கும் முன்கூட்டியே தெரிந்திருந்ததாக அமெரிக்க புலனாய்வு செய்தியா ளர் சேமூர் எம்.ஹெர்ஷ் சில தினங் களுக்கு முன்பு கூறியிருந்தார்.
இதுகுறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் பென் ரோட்ஸ் கூறியிருப்பதாவது:
பின்லேடன் பாகிஸ்தானில் தங்கியிருந்தது அப்போதைய ஐஎஸ்ஐ தலைவருக்கோ அல்லது ராணுவ தலைமை தளபதிக்கோ தெரிந்திருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது. இதை உறுதியாகக் கூற முடியாது. அதேநேரம், பின்லேடன் தங்கியி ருந்தது குறித்து ஐஎஸ்ஐ அமைப் பைச் சேர்ந்த சிலருக்கு தெரிந்தி ருக்க வாய்ப்பு உள்ளது.
அதேநேரம், அமெரிக்க புலனாய்வு அமைப்பின் (சிஐஏ) ஒத்துழைப்புடன் அமெரிக்க ராணுவம்தான் பின்லேடன் இருப் பிடத்தில் சோதனை நடத்துவது என முடிவு எடுத்தது. இதில் பாகிஸ்தானுக்கு எவ்வித பங்கும் இல்லை.
அந்நாட்டு அரசுக்கு முன் கூட்டியே நாங்கள் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
1 min ago
ஆன்மிகம்
28 mins ago
தமிழகம்
34 mins ago
உலகம்
50 mins ago
தமிழகம்
56 mins ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago