இராக்கில் நேற்று கார் வெடிகுண்டு மூலமாகத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது. அதில் ஷியா பிரிவைச் சேர்ந்த 8 யாத்ரீகர்கள் பலியாயினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
இராக்கில் சமர்ரா என்கிற இடத்தில் 9ம் நூற்றாண்டில் வாழ்ந்த, ஷியா பிரிவின் இரண்டு இமாம்களின் நினைவகம் உள்ளது. அவர்கள் இருவரில் ஒருவரின் மறைந்த தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
இதில் கலந்துகொள்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்து யாத்ரீகர்கள் வந்திருந்தனர். அவர்களில் ஷியா பிரிவைச் சேர்ந்த ஒரு குழு, நேற்று இரவு அந்த நினைவகத்துக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு நிறுத்தப்பட்டிருந்த காரில் பொருத்தப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து, தற்கொலைப் படையினர் தாக்குதல் நடத்தினர். இதில் அந்தக் குழுவைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 min ago
தமிழகம்
9 mins ago
விளையாட்டு
22 mins ago
தமிழகம்
32 mins ago
சினிமா
36 mins ago
தமிழகம்
51 mins ago
இந்தியா
1 hour ago
வெற்றிக் கொடி
1 hour ago
இந்தியா
1 hour ago
வேலை வாய்ப்பு
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago